Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
நூல் மதிப்புரை
பெண்ணுரிமைப்போர்
மதி

தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாகச் சொல்லும் அரசியல் கட்சிகள் பல உண்டு. தேர்தலில் பங்கு பெறாத சில பெரியாய அமைப்புகளும் உண்டு. இவை இரண்டிலுமே சேராத பெரியாரியவாதிகளும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதிலும் பெரியாரியப் பெண்ணியவாதிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் என்பதே நிலைமை. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவராக இருப்பவர் தோழர். ஓவியா. தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் பொதுச்செயலராகவும் இருந்தவர். இவர் 1995ம் ஆண்டு தந்தை பெரியான் பிறந்த தின விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவே, எழுத்துருவம் பெற்று ‘பெண்ணுமைப் போர்' என்ற பொருத்தமான தலைப்புடன் குறுநூலாக வெளிவந்திருக்கிறது.

பெண்விடுதலையைப் பற்றி பேசுகிறவர்கள் கூட பெரியாரைப் பற்றிப் பேச மறுப்பதென்பது அன்றைய நிலையெனில் பெரியாரைப் பேசுகிறவர்கள் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதே இல்லை என்பது இன்றைய நிலையாக இருக்கிறது. பெண்ணுமை பற்றிய கூட்டங்களுக்கு பெரியாரியவாதிகள் தம் வீட்டுப் பெண்களை அழைத்து வராமல் இருப்பதற்குக் காரணம் அவர்களது ஆதிக்க மனப்பான்மைதான் என்பதை பெரியாரின் வார்த்தைகளில் சொல்வது சிறப்பாக இருக்கிறது.

இலங்கை பெரியார் என்றழைக்கப்பட்ட டாக்டர் கோவூர் ‘சாமியைக் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்' என்று கூறியது அறிவியல் வகைப்பட்ட நாத்திகம். ஆனால் பெரியான் நாத்திகமோ மனிதநேய நாத்திகம். ஓயாது-ஒழியாது சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் யாருக்காகவும் எதற்காகவும் உண்மைகளை விட்டுக் கொடுக்காத-அதனோடு சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரிய ஆற்றல் பெரியாருக்கு மட்டுமே இருந்தது. அவற்றை முழுமையாகப் புந்துகொள்வதே முழுமுதல் தேவை என்பதை ஓவியா அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

இந்த மண்ணில் பெண்ணடிமைத்தனத்திற்கு அடிப்படையாக உள்ள மனுதர்மத்தையும், அதை உருவாக்கிய பார்ப்பானையும் ஒழிக்காமல் பெண் விடுதலையை அடைய முடியாது என்பது கடுமையானதொரு சூழலில் சொல்லப்பட்ட கருத்து. அக்கருத்தியலையே காலம்தோறும் முன்னெடுப்பது முறையாகுமா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில் மனுதர்மத்திற்கு முன்பு, அதாவது ஆரியர் வருகைக்கு முன்பு இம்மண்ணில் சமத்துவம் தழைத்திருந்ததாகச் செய்தி இல்லை. அப்போதும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூக அமைப்பே நிலவி இருந்தது. மனுதர்மம் சொல்லும் நால்வர்ண பேதம் இல்லாத மேலைநாடுகளில் இன்றும் கொடூரமாக நிலவி வரும் பெண்ணடிமைத்தனமே இதற்கு இன்னொரு சான்று.

நிலவுகின்ற பெண்ணடிமைத்தனத்திற்கு பார்ப்பனரே காரணம் என்பதை விடவும், பார்ப்பனர் தோற்றுவித்த பார்ப்பனியக் கருத்துக்களே ஏற்றத் தாழ்வையும், பெண்ணடிமைத்தனத்தையும் இம்மண்ணில் நீடிக்கச் செய்கின்றன என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் பார்ப்பனல் மிகச்சிலர் அந்தப் பார்ப்பனியக் கருத்துக்களிலிருந்து வெளிவந்து விட்டனர். ஆனால் பார்ப்பனர் அல்லாதோரான மிகமிகப் பலர் அந்தப் பார்ப்பனியத்தின் உள்நுழைந்து பார்ப்பனியர் ஆக மாறிப்போயினர். இத்தகைய சூழலில் நமது நிலை என்பது வெறுமனே பார்ப்பன எதிர்ப்பு என்பதாக இல்லாமல் பார்ப்பனிய எதிர்ப்பாகவே இருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மென்மையான பெயரை வைக்கச் சொன்ன மனுநீதி'யினை ஏற்றுக் கொண்டு "அகிலா' என்றெல்லாம் பெண்ணுக்குப் பெயடுவது தேவையற்றது என்றொரு செய்தியினையும் குறிப்பிடுகின்றார். ஆனால் தற்போது அகிலன், முகிலன், நிலவன் என்று ஆண்களே மென்மைப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்கின்றனர். சாதி, மதத்தை பெயர்களிலிருந்து ஒழிப்பதுதான் முதன்மையானது என்ற தளத்தில் இப்போது காலம் இயங்கி கொண்டு இருக்கிறது.

பெண்கள் வேலைக்குப் போவதால்தான் அமைதி கெடுகிறது எனும் நடுத்தர வர்க்க ஆணாதிக்கவாதிகளுக்கு எதிராகச் சரியான சொல்லடி கொடுக்கிறார் தோழர் ஓவியா. பெண்களுடைய உழைப்பைப் பயன்படுத்தாமலா சமூகம் இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது? காலம் காலமாகப் பெண்கள் களையெடுக்கப் போகாமல் இருக்கிறார்களா? கல்லுடைக்கவில்லையா... மண் சுமக்கப் போகவில்லையா... வேளாண்துறையில் முக்கால்வாசிப் பணிகளை முழுவதும் முடிப்பவர்கள் பெண்கள் மட்டும்தானே? என்கிற கேள்விகள் நிச்சயம் அந்த ஆண்களை வாயடைக்கச் செய்யும்.

மாதத்தில் மூன்று நாள் கோவிலுக்குள் பெண் வரக்கூடாது என்பது மட்டுமல்ல. கோவில் நிர்வாகியாக பெண் வரவே கூடாது என்னும் இந்து அறநிலையத் துறையிடம் பொம்பளைச் சாமிகளுக்கு அந்த மூணுநாள் வரும்போது என்ன செய்வதாக உத்தேசம் என்றும் கேள்வி எழுப்புகிறார். அந்த மூன்றுநாளை தீட்டு, தீண்டாமை என்று சொல்லிப் பெண்ணை ஆண் ஒதுக்குவதற்குக் காரணம் அந்த மூன்று நாளிலும் பெண்ணால் அவனுக்குப் பலனில்லை. அம்மூன்று நாட்களிலும் உடலுறவு இன்பமில்லை. எனவே தீண்டத்தகாத அவள் தீட்டுப் பட்டவள். துப்புரவுப் பணிகளைச் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்டவர்கள் காலம் முழுதும் தீண்டத்தகாதவர்கள். இதுதான் மனுதர்மம் என்று சொல்லப்படும் அதர்மத்தின் ஒட்டுமொத்த வடிவம்.

கொடுங்கோன்மை நிறைந்த தேவதாசி முறையை ஒழிக்க அந்த இனத்தில் பிறந்த முத்துலட்சுமி அம்மையார் தந்தை பெரியான் ஆதரவோடு கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அந்தப் போராட்டங்களை ஒடுக்க காங்கிரசைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ஐயர் தாசி இனம் இல்லாவிட்டால் கலை அழிந்துவிடும். அந்த இனத்தால் தான் கலை வாழ்கிறது. இந்த வாழ்க்கையில் அவர்கள் இவ்வுலகில் துன்பமடைந்தாலும் இறப்புக்குப் பின்னர் அவர்களுக்கெல்லாம் சொர்க்கம் நிச்சயம' என்றாராம். அதற்குப் பதில் சொன்ன பெரியார் அந்த இனத்துப் பெண்கள் நிறைய பேர் சொர்க்கத்திற்குச் சென்று ஏராளமாய் இன்பம் துய்த்து விட்டனர். இனிமேல் உங்கள் இனத்துப் பெண்கள் அந்தக் கலையை வாழவைத்து, சொர்க்கத்தின் இன்பத்தை ஆசைதீர அனுபவிக்கட்டும் என்று பதிலடி கொடுத்தாராம். மேற்கொண்டு ஐயர் வாயைத் திறக்க முடியுமா என்ன?

கற்பைப் பற்றிச் சொல்லவந்த பெரியார் கற்பு என்பது ஒரு மாயை, அது உடைக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்திச் சொன்னதை உறுதிப்படுத்துகிறார் ஓவியா. இந்தக் கற்புநிலையினை பெண்கள்மீது திணிக்காவிட்டால் சாதி அமைப்பைக் காப்பாற்ற முடியாது என்பதைத் தெளிவாகத் தெந்துகொண்டதால்தான் குழந்தை மணத்தையே உருவாக்கி வைத்தனர். கற்பு என்பது இயல்பான உணர்வுதான் என்றால் "பசியும் வலியும் மற்றவர் சொல்லிக் கொடுக்காமல் இயல்பாக வருவதுபோல பதிவிரதாத்தன்மையும் இயல்பாக வந்திருக்க வேண்டுமே! ஆனால் நடப்பதென்ன...? ஆயிரம் கட்டுப்பாடுகளை வைத்து கற்பை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதற்கும்கூட படாதபட்டினைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களே!'' என்று அழுத்தமான கேள்வியினைக் கேட்கிறார் பெரியார்.

அந்த ஆதிக்கவாதிகளால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கற்பு நிலை கூட காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கிறது என்ற உண்மை ஒன்று போதும் - அது செயற்கையாகச் சித்தக்கப்பட்டது என்பதை அறிவதற்கு என்கிற நூலாசியன் வாதத்தையும் எவருமே மறுக்க இயலாது. தமிழ்ச் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் தாலி எனும் அடிமைச் சின்னத்தைக் கைவிட்டும் கூட நடமாட முடியும் என்பதற்கான ஓர் அங்கீகாரத்தை அளித்தது, பெரியான் சுயமயாதை இயக்கம்தான் எனும்போது, பெண் விடுதலை இயக்கங்கள் பெரியாரைத் தனிப்பித்துவிட்டு இம்மண்ணில் இயங்குவது இயலவே இயலாது என்ற உண்மை மிகப் பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது.

ஆண், பெண்ணைத் தனது உடைமையாக நினைப்பதால்தான் இந்த ஆதிக்கச் சமூக அமைப்பு வலுப்பெற்று நிற்கிறது என்பதை உணர்ந்த பெரியாரால் தான், சேலத்தில் ஒரு மாநாடு கூட்டி ஒருவன் மனைவி இன்னொருவனை விரும்புவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்று உரக்கச் சொல்ல முடிந்திருக்கிறது. பெரியாரின் பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் அந்த மாநாட்டுத் தீர்மானத்தை நினைவுபடுத்தி "நீங்கள் சொல்வது மணியம்மையாருக்கும் பொருந்தும் தானே? அப்படியானால் அவரை நான் அழைத்துச் செல்லலாமா என்று கேட்டதற்கு பெரியார் மிகுந்த நிதானத்தோடு கண்டிப்பான தொனியில் பதிலைச் சொல்லுகிறார். "மணியம்மையாரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறாயே... இன்னும் நீ இந்தக் கருத்தில் சரியான புரிதலுக்கு வரவில்லை என்று தெகிறது. முதலில் அறிவைக் கூர்மைப்படுத்து என்கிறார்.

சமூக சமத்துவம் போதித்த அனைத்து நெறிகளையும் விஞ்சி நிற்கிறது பெரியாரியம் என்பதைத் தவிர வேறெதைச் சொல்ல முடியும்? இம்மியளவும் போலித்தனம் இல்லாத ஓர் உண்மையான வாழ்வாக பெரியாரின் வாழ்க்கை இருந்ததால்தான், அவர் காலத்திலேயே, அவரது முயற்சிகளில் சிகரங்களின் உச்சியினைத் தொட்டிருக்கிறார் என்ற உண்மை பிரமிக்க வைப்பதோடு, நிகழ்கால வாழ்க்கையிலும் நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

ஒரு சகாப்தமாக வாழ்ந்து விட்டுச் சென்ற பெரியாரைத் தொடர்ந்து வந்தவர்கள், அவரது கொள்கைகளை கால்வாசி கூட சீரணிக்கவில்லை. எனவே அவர் சொன்னபடி வாழ்ந்து காட்டவில்லை. அவர் சொன்னதெல்லாம் கடைப்பிடித்திருந்தோம் என்றால் திராவிட இயக்கப் பின்னணியிலேயே மிகப்பெரிய புரட்சிப் பெண்களை உருவாக்கி இருக்க முடியும் என்கிற தோழர் ஓவியாவின் சிந்தனையை ‘கோடியில் ஒரு வார்த்தை' என்று சொல்வதே சாலப் பொருந்தும். ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது பதிப்பாக வந்திருக்கும் இந்நூலில் உள்ள உண்மைகள் இப்போதேனும் பெரியாரியவாதிகள் மற்றும் சமூக மாற்றம் கோருவோன் உள்ளுணர்வில் ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில்... அவர்களது உழைப்பு வீண்... காலமும் வீணே... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com